Sunday, 28th April 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
உடுமலை: உடுமலை மின்பகிர்மான வட்டத்துக்குட்பட்ட ஆலாமரத்தூர், கொங்கல்நகரம் துணை மின் நிலையங்கள் வாயிலாக 30க்கும் மேற்பட்ட கிராமங்கள், விவசாயம் மற்றும் தொழிற்சாலை மின் இணைப்புகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த மே மாதம் ஆலாமரத்தூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அப்பகுதி கிராமங்களில் கடுமையான மின்வெட்டு இருந்தது. தற்காலிக தீர்வாக கொங்கல்நகரம் துணை மின் நிலைய மின்பாதை வழியாக அப்பகுதி கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொங்கல்நகரம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே விரைவில், ஆலாமரத்தூர், கொங்கல்நகரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் சீரான மின் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் மின்வாரிய அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர்.